கட்டிட இடுபாடுகளுக்கு சிக்கிய கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி
கோவில்பட்டி அருகே கட்டிடம் இடிக்கும் போது ஏற்பட்ட விபத்து - எதிர்பாராத விதமாக கட்டிட இடுபாடுகளுக்கு சிக்கிய கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் பகுதியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவர் மகன் மணிகண்டன் வயது (35) கூலித் தொழில் செய்து வருகிறார் மேலும் அவ்வப்போது ட்ரில்லிங் மெஷினை வைத்து கட்டிடங்களை உடைக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது இந்நிலையில் இவர் கோவில்பட்டி கடலையூர் சாலையில் சுப்பையா என்பவருக்கு சொந்தமான வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதற்காக தற்போதுள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி யில் ஈடுபட்டு வந்துள்ளார் கட்டிடத்தை டிரில்லிங் மிஷினை வைத்து உடைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி தவறி விழுந்து கட்டிட இடைபாடுகளுக்குள் சிக்கி உள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஜே. சி.பி இயந்திரம் கொண்டு கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவரை மீட்ட போது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.. இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பம் அவர்களது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Tags :