17 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது...

by Admin / 04-08-2021 12:28:05pm
17 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது...

 


 
சென்னை புளியந்தோப்பு பகுதியில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் தனது மகளை கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை  புகார்  அளித்திருந்தார்.

 இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞருடன் சென்றது தெரியவந்தது.

 இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

 இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாகவும், 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து தினேஷ்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via