தீப்பிடித்து எரிந்த பஸ்.. நொடியில் தப்பிய பயணிகள்
ரெட் ஹில்ஸ் அருகே ஆந்திர மாநில அரசு பேருந்து வியாழக்கிழமை இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. எனினும் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாததால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மாதவரத்தில் இருந்து ஆத்மகூருக்கு 47 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் இன்ஜினில் இருந்து திடீரென புகை வந்ததால் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை வெளியேற்றியுள்ளார். ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டதால் 47 பயணிகள் காயமின்றி தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
Tags :