சாதிய கொலைவெறி தாக்குதலை கண்டித்து 21 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் -திருமாவளவன் அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை - சந்திராசெல்வி ஆகியோரின் மீது நடத்தப்பட்ட சாதிய கொலைவெறி தாக்குதலை கண்டித்து ஆகத்து 21ஆம் தேதி திங்கட்கிழமை அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் திருநெல்வேலியில் நடைபெறுகிறது. 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது . தோழர்கள், சனநாயக சக்திகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்கவும் என அந்த அறிக்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் - தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Tags : திருமாவளவன் அறிவிப்பு.