பிரம்ம குமாரிகள் முப்பெரும் நிகழ்வுகளின் மாபெரும் துவக்க விழா

by Admin / 16-08-2023 11:16:19pm
பிரம்ம குமாரிகள் முப்பெரும் நிகழ்வுகளின் மாபெரும் துவக்க விழா

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் அமைந்துள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் மஹாலில் பிரம்ம குமாரிகள் முப்பெரும் நிகழ்வுகளின் மாபெரும் துவக்க விழா நடைபெற்றது 

இவ்விழாவினை பி. கே சுமன் மற்றும் பி .கே சச்சின் பாரப் துவக்கி வைத்தார்கள்.      எஸ் கே சி குப்புசாமி டாக்டர்ஷர்மிளா பாலகுரு சிறப்பு  விருந்தினர்களாக கலந்து கொண்டனர் பிகே  பாண்டிய மணி மற்றும் பி.கே. ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சின்னாளபட்டியைச் சேர்ந்த காந்திமதி நடன ஆலயம் குரூப்ஸ் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது  இந்நிகழ்ச்சியில் ஆன்மீக எழுச்சி ஆக்கப்பூர்வ முயற்சி எனது கலாச்சாரம் எனது அடையாளம் எனது தமிழ்நாடு போதையற்ற தமிழ்நாடு ஆகிய திட்டங்கள் துவக்கப்பட்டன

இந்நிகழ்ச்சியின் இறுதியில் வி கே சீதா தியான அனுபவம் பற்றி செய்வித்தார்கள் பிகே கோபாலகிருஷ்ணன் நன்றிகள் நன்றியுரை நிகழ்த்தினார் விழாவினை பி கே ராணி தொகுத்து வழங்கினார்கள் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via