ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை

by Staff / 19-08-2023 12:05:15pm
ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை

கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த சித்தரசூர் வயல் பகுதியில், நேற்றிரவு 10:30 மணி அளவில் வயலில் இளைஞர் ஒருவரின் உடல் தலை, கால்கள் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் புதுச்சேரி, முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த முகிலன் (26) என்பதும், புதுச்சேரி ரவுடி மர்டர் மணிகண்டனின் கூட்டாளி என்பதும் தெரியவந்துள்ளது.
 

 

Tags :

Share via