விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ தீவிரம்
சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து நாளை மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இந்த இடத்தில்தான் சந்திரயான் 2 தோல்வியடைந்தது என்பதால் இந்த முறை எந்த தவறும் ஏற்படாமல் இருக்க கடைசி நொடிகள் வரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் பணிக்காக ரோவர் தரையிறங்கும் காட்சியை காண உலகமே ஆர்வமாக உள்ளது. மேலும், சூழல் சாதகமாக இல்லாவிட்டால், வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags : விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ தீவிரம்