நீர்வீழ்ச்சியில் திடீர் நிலச்சரிவு - அலறியடித்த மக்கள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை அந்த மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே உத்தரகாண்டில் பல இடங்களில் சாலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. சமீபத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓடினர். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை சாமோலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த வெள்ளம் காரணமாக பெரும் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :