சாலையோர பேக்கரியில் சூடா டீ சாப்பிட்ட எடப்பாடியார்..

by Editor / 27-08-2023 07:20:45pm
சாலையோர பேக்கரியில் சூடா டீ சாப்பிட்ட எடப்பாடியார்..

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 24ந் தேதி வியாழக்கிழமையிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமைவரை அவரது சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையத்திலுள்ள வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டும் அவ்வப்போது நிர்வாகிகளையும் சந்தித்து வந்தார். இதனிடையே இன்று மாலை எடப்பாடியில் இருந்து சேலத்தை நோக்கி செல்லும் போது 
எடப்பாடி சுற்றுப்புற வழிச்சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் திடீரென தனது வாகனத்தை நிறுத்த சொல்லி சூடாக ஒருகப் டீயை அந்தபேக்கரியில் ஆர்டர் செய்து ஆற அமர அமர்ந்து அங்கு டீக்குடித்துக்கொண்டிருந்த மக்களோடு மக்களாக அமர்ந்து தேநீர் அருந்திவிட்டு சேலம் நோக்கி புறப்பட்டார். அப்போது எடப்பாடி நகரச் செயலாளர் முருகன், நகர ஜெ.பேரவை செயலாளர் கதிரேசன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் அவருடன் இருந்தனர்.எடப்படியாரின் இந்த அதிரடி அங்கு டீ க்குடித்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

Tags : சூடா டீ சாப்பிட்ட எடப்பாடியார்..

Share via