திருமணம் செய்ய மறுத்ததால் சிறுமி கொடூரக் கொலை

by Staff / 31-08-2023 12:00:44pm
திருமணம் செய்ய மறுத்ததால் சிறுமி கொடூரக் கொலை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 13 வயது சிறுமி திருமணம் செய்ய மறுத்ததால், இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அஜ்னாலாவை சேர்ந்த இளைஞர் காதல் என்ற பெயரில் சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் பெற்றோர் சிறுமியை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செவ்வாய்கிழமை மாலை அங்கு சென்ற இளைஞர் சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுமியும், குடும்பத்தினரும் மறுத்ததால், சிறுமியை சுட்டுக் கொன்றார். உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via