கார் மீது பொக்லைன் விழுந்ததில் மூன்று பேர் சம்பவ பலி
தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தில் பயங்கர விபத்து நடந்தது. கார் மீது பொக்லைன் விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர். மோர்தாட் மண்டலம் டோங்கலைச் சேர்ந்த லட்சுமி என்பவர் குடும்பத்துடன் படாபிம்கல் எல்லம்மா கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது பீம்கால் பகுதியில் உள்ள மின் துணை மின்நிலையத்தில் கார் மீது பொக்லைன் விழுந்தது. இதில் லட்சுமியின் மகன் ராஜேஷ்வர், கோடலு ஜோதி, மகள் ரமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Tags :