ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பு

by Staff / 01-09-2023 12:45:08pm
ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பு

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற மத்திய அரசின் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில், அதில் உள்ள கள நிலவரம், செயல்பாட்டு முறை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான அந்தக்குழு நாடாளுமன்ற தேர்தலுடன், அனைத்து மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேவையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது. வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், இது பற்றிய மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via