“கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன்” அதுவே சனாதனம் சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலையை கொண்டு வந்தால் ரூ.10 கோடி தரப்படும் என அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் . இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எம்பி சு.வெங்கடேசன், ‘சனாதனத்தை ஆதரித்து ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்திலும், ஆளுநர் நாடெங்கும் பேசலாம். அது நேர்மையோடு எதிர்கொள்ளப்படும். அதுவே ஜனநாயகம். ஆனால் சனாதனத்தை எதிர்த்துப் பேசினால் நேர்மைக்கு வேலையில்லை. “கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன்” என்ற சல்லித்தனமே அரங்கேறும். அதுதான் சனாதனம்’ என பதிவிட்டுள்ளார்.
Tags :