உதயநிதி மீது வழக்கு பதிவு
சனாதனம் பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி மீது உதிர்ப்பிரதேசத்தின் ராம்பூர் காவல்நிலையத்தில் தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதனம் பற்றி பேசி இந்து மக்களின் மனதை புண்படுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில், உதயநிதி மற்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க உதயநிதிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், உதயநிதி ஸ்டாலின் மீது காவல் துறையில் புகார்களை அளித்து வருகின்றன.
Tags :