ஆபாச வீடியோ வழக்கு - ஷில்பாவிடம் இன்று மீண்டும் விசாரணை

by Admin / 26-07-2021 02:29:08pm
ஆபாச வீடியோ வழக்கு - ஷில்பாவிடம் இன்று மீண்டும் விசாரணை


 
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் மீண்டும் விசாரணை நடத்த மும்பை குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பாலியல் படங்களை எடுத்து அதனை இணைய செயலியில் பதிவேற்றியது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும்  தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவருடம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.
 
அப்போது தனது கணவர் அப்பாவி என்றும் பாலியல் படங்கள் எடுக்கப்பட்டதற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் மும்பை குற்றப்பிரிவு போலீசார் இன்று மீண்டும் விசாரணை நடத்த  உள்ளனர்.

 

Tags :

Share via