ரஷ்யாவிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்தி வந்த கும்பலை சேர்ந்த 4 பேர் கைது. 

by Editor / 08-05-2024 10:18:08am
ரஷ்யாவிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்தி வந்த கும்பலை சேர்ந்த 4 பேர் கைது. 

தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்திவந்த கும்பலை சேர்ந்த 4 பேரை சி.பி.ஐ.கைதுசெய்துள்ளது.கன்னியாகுமரியை சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையை சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேரளாவை சேர்ந்த அருண், யேசுதாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை கடத்தி வந்தது அம்பலம் ஆகியுள்ளது..கடத்தப்பட்ட இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதாகவும், தமிழ்நாட்டை சேர்ந்த நிஜில் ஜோபி, ரஷ்யாவில் இருந்த படி கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது..கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. சென்னை உட்பட 7 நகரங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ரஷ்யாவிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்திவந்த கும்பலை சேர்ந்த 4 பேர்கைது. 

Share via