கடை ஊழியர்களை கத்தியால் குத்திய 5 பேர் கைது

by Staff / 22-09-2023 03:20:04pm
கடை ஊழியர்களை கத்தியால் குத்திய 5 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே உள்ள மீனவர் காலனியை சேர்ந்தவர் அன்சர் அலி. இவர் சேலம் அம்மாபேட்டை அருகே வாய்க்கால் பட்டறை பகுதியில் சமோசா கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அவரது தம்பி அம் சத் அலி (28) என்பவர் உள்பட சிலர் வேலை பார்த்து வரு கின்றனர். இந்த கடை விடிய, விடிய செயல்படும். இந்த கடைக்கு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் வந்தனர். பின்னர் அவர்கள், சமோசா வாங்கிவிட்டு பணம் கொடுக்க மறுத்தனர். இதனால் கடை ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மர்மநபர்கள் அம்சத் அலி மற்றும் ருக்குல்லா (42) ஆகியோரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக அம்மா பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கடை ஊழியர்களை கத்தியால் குத்தியதாக அல்லிக்குட்டை பகு தியை சேர்ந்த ஆனந்தன் (24), மணிகண்டன் (19). தேவேந்தி ரன் (24) மற்றும் 16, 18 ஆகிய வயதுடைய 2 வாலிபர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக் கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via