நாடாளுமன்ற தேர்தல்: துணை ராணுவம் வருகை

by Staff / 06-04-2024 11:47:58am
நாடாளுமன்ற தேர்தல்: துணை ராணுவம் வருகை

நாடாளுமன்ற தேர்தலை பாதுகாப்பாக நடத்த திருப்பத்தூர் மாவட்டத்திற்கு துணை ராணுவம் வருகை தந்த நிலையில் ராணுவ வீரர்களை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வரவேற்று ஆலோசனை வழங்கினார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, “500க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்தவரை 106 பதட்டமான வாக்கு சாவடிகள் உள்ளது” என்றார்.

 

Tags :

Share via