பெண் தோழியுடன் நட்பை கைவிட மறுத்த கணவனை கொலை செய்த மனைவி

by Editor / 09-08-2022 12:08:36pm
பெண் தோழியுடன் நட்பை கைவிட மறுத்த கணவனை கொலை செய்த மனைவி

கடலூர் பெண் தோழியுடன் நட்பை கைவிட மறுத்த கணவனை கொலை செய்ததாக மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். நெய்வேலி என்எல்சி நிறுவன தொழிலாளியான சண்முகம் தனது குடும்பத்தினருடன் வட்டம் 4 பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் மர்மமான முறையில் சண்முகம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பூட்டிய வீட்டில்  இறந்து கிடந்துள்ளார். தகவலின்பேரில் வந்த போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணுடன் சண்முகம் நட்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி சசிகலா கண்டித்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அவர் கணவனை கொலை செய்ய திட்டம் போட்டு  தனது மகளின் ஆண் நண்பருடன் இணைந்து சண்முகத்தை  வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

 

Tags :

Share via