வீட்டு வாசலில் கிடந்த இளைஞர் சடலம்
பஞ்சாபில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கபுர்தலாவைச் சேர்ந்த ஹர்தீப் சிங் (22) என்ற இளைஞன் புதன்கிழமை சில குண்டர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டு, அவனது பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்டான். உங்கள் மகனை கொன்று விட்டோம் என சத்தம் போட்டதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 'இதோ உங்கள் சிங்கம். இப்போதே எடுத்துவிடு' என, கிண்டல் செய்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை குருநாம் சிங் புகாரின் பேரில், கொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags :