1300 வாகனங்கள் பறிமுதல்
சென்னை மாநகர சாலைகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கண்டுபிடித்து அவைகளை ஏலத்தில் விட மாநகராட்சி முடிவு செய்தது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.கடந்த 1-ம் தேதி முதல் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 16 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோக்கள், 95 நான்கு சக்கர வாகனங்கள் என 132 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை வடக்கு மண்டலத்தில் 271 வாகனங்கள் கேட்பாரற்று இருந்தன.இதில் 14 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றன. மத்திய மண்டலத்தில் 644 வாகனங்களில் 101 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தெற்கு மண்டலத்தில் 393 வாகனங்களில் 17 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
Tags :