நடிகர் ஆர்.கே சுரேஷின் சொத்துக்கள் முடக்கம்
பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷின் சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆர்.கே. சுரேஷ் ஆஜராகாததால், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் ஆர்.கே. சுரேஷ் துபாயில் இருப்பதால், அந்த நாட்டு அரசை தொடர்பு கொண்டு அவரை இந்தியா அழைத்துவரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
Tags :