தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த பெண்ணுக்கு சிறை.

by Staff / 05-10-2023 12:14:24pm
தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த பெண்ணுக்கு சிறை.

சென்னை மணலியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மோகனா(42). இவர், கடந்த 2013இல், மாத்துார் பகுதியைச் சேர்ந்த 31 பேரிடம், தீபாவளி பண்டு சீட்டு 4ஆண்டுகளாக நடத்தி, ரூ. 63. 52 லட்சம் வசூல் செய்துள்ளார். பணம் கட்டியவர்கள் சீட்டு பணத்தை திருப்பி கேட்டதற்கு தராமல் ஏமாற்றி உள்ளார்.இது குறித்து பாதிக்கப்பட்டோர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் மனு அளித்தனர். புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை, பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்தது.இந்நிலையில் நேற்று இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகனா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 3ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10, 000 அபராதம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 36. 44 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

Tags :

Share via