குரங்குகள் விஷம் வைத்து கொலை

by Staff / 08-10-2023 04:22:50pm
குரங்குகள் விஷம் வைத்து கொலை

தெலுங்கானாவில் 35க்கும் மேற்பட்ட குரங்குகளை விஷம் வைத்து கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத் மண்டலத்தில் நடந்த இந்த சம்பவம் உள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. குரங்குகள் கொல்லப்பட்டு அவற்றின் சடலங்களை ஒரு பாதையில் வீசியுள்ளனர். சுரங்கத் தொழிலால் மலைகள் உடைக்கப்பட்டு, அகற்றப்படுவதால், குரங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக அவற்றை விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Tags :

Share via