தேர்தல் விதிமீறல்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

by Staff / 12-04-2024 01:11:11pm
தேர்தல் விதிமீறல்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நேற்றிரவு சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து ஆவாரம்பாளையம் 28ஆவது வார்டில் பிரச்சாரம் செய்யும் போது இரவு 10.40 ஆனதாகக் கூறப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற விதியை அவர் மீறியது சர்ச்சையானது. இது தொடர்பாக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் போலீசார் தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via