கசந்த காதல்.. இளம் பெண் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணமான 7 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொண்டியாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் - பச்சையம்மாள் என்ற தம்பதி கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில், திருமணமான சில மாதங்களிலே கணவன் மனைவியிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பச்சையம்மாள் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :