4 மாத கர்ப்பிணி பெண் தீ வைத்து எரித்துக் கொலை

by Staff / 14-10-2023 04:09:02pm
4 மாத கர்ப்பிணி பெண் தீ வைத்து எரித்துக் கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் ராஜ்குமார் என்ற நபர் தனது மனைவி நான்கு மாத கர்ப்பிணி நந்தினியை (28) தீ வைத்து எரித்தார். ராஜ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் பொறுமை இழந்த அவர், மனைவிக்கு தீ வைத்துவிட்டு மகனுடன் ஓடிவிட்டார். பலத்த காயங்களுடன் அப்பெண் இறந்தார். போலீசார், ராஜ்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த கொடூர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via