யானை தாக்கி பெண் பலி

by Staff / 17-10-2023 04:33:34pm
யானை தாக்கி பெண் பலி

கடம்பூர் அருகே யானை தாக்கி பெண் பலி வனத்துறை மற்றும் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
சத்தி புலிகள் காப்பகத்தில் கடம்பூர் மலைப்பகுதி சின்னசாலட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையம்மாள்(55) இவர் மாஸ்தி கொடிக்கால் என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது இளையம்மாள் எதிர்பாரத நேரத்தில் வனப்பகுதி புதர் மறைவில் நின்றிருந்த ஒற்றை காட்டு யானை இளையம்மளை தாக்கியதில் யானையிடம் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானை தாக்கி பலியானதாக கூறப்படும் இளையம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வனப்பகுதிக்குள் இருந்து உடலை எடுத்து செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் கிராமமக்கள தொட்டில் கட்டி தூக்கி சென்றனர். யானை தாக்கி பெண் இறந்த சம்பவம் குறித்து கடம்பூர் வனத்துறையினர் மற்றும் கடம்பூர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via