கணவர் தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 21-10-2023 01:18:59pm
கணவர் தூக்கு போட்டு தற்கொலை

கல்லணை அருகே மனைவியிடம் ஏற்பட்ட பிரச்சனையில் குடிகார கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லணை அருகே செய்யாமங்கலம் நடு தெருவை சேர்ந்தவர் பழனிவேல் மகன் முருகானந்தம் (40). இவர் திருச்சி துவாக்குடியில் தனியார் கம்பெனியில் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 19ம் தேதி இரவு முடித்துவிட்டு வந்து இவரது மனைவியிடம் பிரச்சனை செய்துள்ளார் பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அதை அணைத்த பிறகு 108 உதவியுடன்  அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த பொழுது தப்பி ஓடிவிட்டார். அவரை அனைத்து இடங்களும் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் இரவு 2 மணி அளவில் அருகில் உள்ள மாட்டுக்கொடகையில் தூக்கில் இறந்த நிலையில் தொங்கி உள்ளார்.  இது குறித்து முருகானந்தம் மனைவி பிரேமா தோகூர்  போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via