இந்த ஆண்டிலேயே.. மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை
மதுரை எய்ம்ஸ் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.அதில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் முடியும் வரை, தற்காலிகமாக ஒரு இடத்தை தொடங்கி அங்கு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையையும் புற நோயாளிகள் பிரிவையும் தொடங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை மறுநாள் (ஜூலை 30) விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாகத் தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் 50 முதல் 100 மாணவர்கள் வரை முதலில் சேர்க்கை நடத்தத் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் செலவினம், அலுவலர் தேர்வு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :