வருகின்ற மசோதாவை அப்படியே ஏற்பதற்கு ஆளுநர் எதற்கு - தமிழிசை
வருகின்ற மசோதாவை அப்படியே ஏற்பதற்கு ஆளுநர் எதற்கு? என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஆளுநர்கள் அரசு அனுப்பும் மசோதாவை ஆராயாமல் கையெழுத்து இட வேண்டும் என்று நினைப்பது நியாயமா? ஜனநாயக நாட்டில் இந்த மாதிரியான அழுத்தம் தரப்பட கூடாது. ஆளுநர், மாநில அரசு இடையேயான உறவு மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :