காசாவில் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர்
காஸா பகுதியில் போர் நிறுத்தம் இருக்காது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் சரணடைவதையே குறிக்கும் என செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்தார். "போர்நிறுத்தம் என்பது நடக்கக்கூடிய ஒன்றல்ல. இந்த போர் முடியும் வரை இஸ்ரேல் தொடர்ந்து போராடும். மேலும் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க சர்வதேச சமூகம் கோர வேண்டும்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
Tags :