இளம்பெண்ணை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியை சேர்ந்த 41 வயது பெண் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். இதை நோட்டமிட்டு வந்த கொள்ளைக் கும்பல், தனியாக இருந்த அப்பெண்ணை கட்டிப்போட்டு ரூ.3 லட்சம் ரொக்கம், லேப்டாப் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர். சத்தம் கேட்டு அங்கு சென்ற 19 வயது இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags :