ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் - பிரதமர் மோடி
மக்கள் ஆசியுடன் ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோதும் முதலமைச்சர்கள் ஊழல் செய்து வருகின்றனர். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின் காங்கிரஸார் ஊழல் செய்து வந்ததை தடுத்து நிறுத்தினோம். நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வது தான் எங்களின் உத்தரவாதம் என தெரிவித்தார். மத்தியப்பிரதேசத்தில் வரும் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
Tags :