டெல்லியில் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தரவு

by Staff / 19-11-2023 12:28:39pm
 டெல்லியில் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தரவு

டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்தி நாளை (திங்கள்கிழமை) முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதி தீவிர நிலையில் இருந்ததால் வெள்ளிக்கிழமை வரை காற்றின் தரக் குறியீட்டு எண் 400 என்ற நிலையிலே தொடர்ந்தது. தற்போது, டெல்லியில் காற்றின் தரம் சற்று முன்னேறி இருப்பதாகவும், சனிக்கிழமையன்று 340 ஆக காற்றின் தரக் குறியீடு பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via