3 வேளாண சட்டங்களும் வாபஸ் - விவசாயிகள் உற்சாகம்.

by Admin / 19-11-2021 03:14:13pm
3 வேளாண சட்டங்களும் வாபஸ் - விவசாயிகள் உற்சாகம்.

3 வேளாண சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர்மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட 3 வேளாண சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். இது தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கொண்டாடி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்காக ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் தியாகத்திற்கு பலன் கிடைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
 
குருநானக் ஜெயந்தி கொண்டாடும் இந்த வேளையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via