சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை

by Staff / 22-11-2023 01:22:51pm
சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா (33). இவர் 50 வயது பெண் ஒருவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில், அந்த பெண்ணின் 11 வயது பேத்தியை யாரும் இல்லாத நேரத்தில் ராஜா பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்து குறைப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகளிர் போலீசில் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ராஜா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளிதார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.15 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.

 

Tags :

Share via