குஷ்பு வீடு முற்றுகை: காங். அறிவிப்பு.

by Staff / 25-11-2023 05:33:56pm
குஷ்பு வீடு முற்றுகை: காங். அறிவிப்பு.

குஷ்பூ தன்னை சிறந்த நடிகை என தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்றும் குஷ்பு மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார் எனவும் காங்கிரஸ் எஸ். சி. துறை விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எஸ். சி. துறை தலைவர் ரஞ்சன் குமார் கூறியதாவது; சிறந்த நடிகை என்பதை குஷ்பூ தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் சேரி மொழி என்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, ஒரு நாள் முழுவதும் தேடிப்பிடித்து பிரெஞ்சு மொழியில் சேரி என்றால் அன்பு என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். எனவே, பெரும் தவறை செய்துவிட்டு மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்பூவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி. , எஸ்டி. , பிரிவின் சார்பில் எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் உணர்வுள்ள அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றேன். அதேபோல், பிற கட்சிகளில் உள்ள எஸ்சி. , எஸ்டி. , பிரிவினரும் பாசிச பாஜகவுக்கு எதிரான சக்திகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via