ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு..

by Staff / 25-11-2023 05:37:56pm
ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு..

சென்னையில் நேற்று. ஆட்டோவில் ஹவாலா பணம் ரூ. 2கோடியை சிலர் எடுத்து வந்தனர். இதைக் கண்டு சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுனர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.இதை தொடர்ந்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்ததில் , ரூ. 2. 10கோடி ஹவாலா பணம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பணம் கடத்தி வந்தவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், பணத்தை பிடித்து கொடுத்த ஆட்டோ டிரைவரை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.

 

Tags :

Share via