அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு

by Editor / 02-12-2023 09:32:15am
அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 13 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை 13 மணி நேரத்திற்கு பிறகு தற்போது நிறைவடைந்தது.

 

Tags : அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு

Share via