இரண்டு,முறை தெலங்கானா முதலமைச்சராக இருந்த சந்திரசேகர ராவ் பதவியை பறி கொடுக்க உள்ளாா்.
தெலங்கானா வாக்கு எண்ணிக்கையில் 70 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதனால் அங்கு காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அவரது அமைச்சரவை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து டிசம்பர் 9 ஆம் தேதி முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைப்பெறும் என காங்கிரஸ் கட்சி தலைவரும், வேட்பாளருமான ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியாக பிரிந்து உருவான தெலங்கானா மாநிலத்தில் இரண்டு,முறை முதலமைச்சராக இருந்த சந்திரசேகர ராவ் பதவியை பறி கொடுக்க உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :