மத போதகர் கொலை: பெண் கைது

by Staff / 08-12-2023 05:17:12pm
மத போதகர் கொலை: பெண் கைது

கடலூர் மாவட்டம் பொன்னடத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் வீராசாமி என்கின்ற டேனியல் வயது 62 மதபோதகர் ஆன இவர் மண்டையூர் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடியேறியுள்ளார். சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று மத போதனையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த சங்கர் மனைவி செல்வி என்கின்ற பிரின்சி வயது 46 என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர் வீட்டுக்கு வந்து சமையல் செய்து கொடுக்கும் பணிக்காக அங்கே தங்கி உள்ளார். வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் டேனியலின் வீட்டிலிருந்து சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்து வீட்டார் மண்டையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு போலீசார் வந்து பார்த்தபோது தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் டேனியல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மதபோதகர் ஆன டேனியல் தன்னை தினமும் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட கோபத்தால் வாகனத்தின் பல் சக்கரத்தால் அவரே தாக்கி கொன்றதாகவும் பிரின்ஸி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து டேனியல் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு கூட குறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து போலீசார் பிரின்சியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via