வடமாநில தொழிலாளி தூக்கு போட்டு பலி

by Staff / 08-12-2023 05:02:12pm
வடமாநில தொழிலாளி தூக்கு போட்டு பலி

பெருந்துறையை எடுத்துள்ள சென்னிமலை அருகே வடமாநில தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்திரப் பிரதேச மாநிலம், குஷிநகரை சேர்ந்தவர் அபிஷேக் சிங் (21). இவர் கடந்த சில மாதங்களாக ஈங்கூர், வெட்டுக்காட்டு வலசு பகுதியில் இரு நண்பர்களுடன் அறை தங்கி இருந்து சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அபிஷேக் சிங் தனக்கு உடல்நிலை சரியில்லை என நண்பர்களிடம் கூறிவிட்டு வேலைக்கு செல்லாமல் அறையிலேயே இருந்துள்ளார். பின்னர் இவருடைய நண்பர்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டு மாலையில் அறைக்கு திரும்பி உள்ளனர். அப்போது அறையின் உள் கதவு தாழிடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் அபிஷேக்சிங் திறக்காததால் அவருடைய நண்பர்கள் இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்கு மின்விசிறியில் துணியால் தூக்குப்போட்டு அபிஷேக் சிங் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அபிஷேக் சிங்கின் நண்பர் அலோக் சிங் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து எதற்காக அபிஷேக் சிங் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிரேத பரிசோதனைக்காக அபிஷேக் சிங்கின் உடலை பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via