இரயில்வே அமைச்சருடன் வைகோ எம்.பி. சந்திப்பு.

by Editor / 14-12-2023 10:47:54am
இரயில்வே அமைச்சருடன் வைகோ எம்.பி. சந்திப்பு.

ஒன்றிய இரயில்வே அமைச்சருடன் வைகோ எம்.பி. சந்திப்பு இச்சந்திப்பில் வைகோ வலியுறுத்திய கோரிக்கைகள்..

கோரிக்கை 1..

 தென்காசி மாவட்டத்தின் பழைமையான கரிவலம்வந்தநல்லுர் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் .
இராஜபாளையம் - சங்கரன்கோவில் மார்க்கத்தில் 32 கிமீ தூர இடைவெளியில் வேறு ரயில் நிலையங்களே இல்லாத நிலையில் கரிவலம் இரயில் நிலையம் திறக்கப்பட்டால், அந்த வழித்தடத்தில் பயண நேரம் குறையும்.

காசிக்கு இணையான புகழ் பெற்ற பால்வண்ணநாதர் பெயர் தாங்கிய சிவ ஆலையம் இங்கு  பெற்றுள்ளது. 

சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 24 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், நெசவாளர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பயன் பெறுவர்
என்பதையும், 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதையும், பாழடைந்து கிடக்கின்ற பணியாளர் குடியிருப்புகள் சீரமைக்கப்பட்டு தனி பயணச்சீட்டு மையம் திறக்க நடவடிக்கை வேண்டும் என்பதையும் நேரில் விளக்கி கடிதமாக அளித்தார்கள்.

அதே போல் தமது சொந்த ஊர் கலிங்கப் பட்டிக்கு நெருக்கமான தூரத்தில் கரிவலம் இரயில் அருகில் உள்ளது  என்பதையும், கங்கை நதிக்கு இணையான சிறப்புடைய நிச்சேப நதிக்கரையில் கரிவலம் அமையப் பெற்றுள்ளது என்பதையும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உடல் எரியூட்டப்பட்ட புனிதச் சாம்பல் இந் நதியில்  கரைக்கப்பட்டது என்பதையும் நேரில் எடுத்துச் சொன்னார் வைகோ எம்.பி.

கோரிக்கை 2..

இரயில்வே துறை இயக்கியுள்ள
நெல்லை - சென்னை வந்தே பாரத் இரயில் தென் மாவட்ட மக்களுக்கு பயன் அளித்து வருகிறது.. 
இந்த ரெயிலை  மக்களின் வசதிக்கான தெற்கு ரயில்வேக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் வர்த்தக நகரம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் உத்தரவு பிறப்பிக்க  வேண்டும் என 21.09.2023 நாளிட்ட  கடித வாயிலாகவும், நேரிலும்,  வலியுறுத்தினேன். 
பொதுமக்களும், வர்த்தகர்களும் அன்றாடம் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். அதி முக்கியத்துவம் வாய்ந்த  இக் கோரிக்கையினை
யும் விரைந்து  நிறைவேற்றித் தர வேண்டுகிறேன் ..

கோரிக்கை 3

 ஈரோடு - திருநெல்வேலி (இரயில் எண்கள் 16845 | 16846) இரயிலை
திருநெல்வேலியில் இருந்து பத்தமடை, சேரன்மகாதேவி, கல்லடைக்குறிச்சி அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்ச் சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டித்து இயக்கிட வேண்டும்..
இப்பகுதி மக்களுக்கு ஈரோடு வழி  செல்ல இது தான் முதல் வாய்ப்பு என்பதை கருத்திற் கொண்டு நீட்டிப்பு வழங்கிட வலியுறுத்தினார்கள்

 

Tags : இரயில்வே அமைச்சருடன் வைகோ எம்.பி. சந்திப்பு.

Share via