தண்டனையை நிறுத்திவைக்க கோரி மனு

by Staff / 21-12-2023 05:22:08pm
தண்டனையை நிறுத்திவைக்க கோரி மனு

பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாகர்கோவிலைச் சேர்ந்த காசி, தண்டனையை நிறுத்திவைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளதால், அந்த நாட்களில் தனது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியுள்ளார். சிபிசிஐடி போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்தது.

 

Tags :

Share via