நெல்லை, தூத்துக்குடிமாவட்டங்களுக்கு  6 ஆயிரம்,குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ஆயிரம்.முதல்வர் அறிவிப்பு.

by Editor / 21-12-2023 08:09:33pm
நெல்லை, தூத்துக்குடிமாவட்டங்களுக்கு  6 ஆயிரம்,குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ஆயிரம்.முதல்வர் அறிவிப்பு.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் அறிவித்துள்ளார். நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது. சென்னை மக்களை காப்பாற்றியதுபோன்றே தென்மாவட்ட மக்களையும் பாதுகாப்போம். வானிலை மையம் கணித்ததைவிட பல மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.

 

Tags : நெல்லை, தூத்துக்குடிமாவட்டங்களுக்கு  6 ஆயிரம்,குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ஆயிரம்.முதல்வர் அறிவிப்பு.

Share via