MP மற்றும் MLA மீதான வழக்குகளை ஜனவரி 2ம் தேதி முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார்.

by Editor / 23-12-2023 08:28:38pm
MP மற்றும் MLA மீதான வழக்குகளை ஜனவரி 2ம் தேதி முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார்.

MP மற்றும் MLA மீதான வழக்குகளை ஜனவரி 2ம் தேதி முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார்.
- உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் அறிவிப்பு.

மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசின் 3 மாத பணி என்பது முடிவுக்கு வர உள்ளது. இதனால் மீண்டும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு திரும்ப உள்ளார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏக்கள், மீதான வழக்குகளை ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நடத்த உள்ளார். தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வழக்குகள் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

 

Tags : MP மற்றும் MLA மீதான வழக்குகளை ஜனவரி 2ம் தேதி முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார்.

Share via