பாழடைந்த வீட்டில் எலும்புக்கூடுகள்.. 5 பேர் மர்ம மரணம்

by Staff / 30-12-2023 12:50:32pm
பாழடைந்த வீட்டில் எலும்புக்கூடுகள்.. 5 பேர் மர்ம மரணம்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓய்வுபெற்ற செயற்பொறியாளர் ஜெகநாத் ரெட்டி (85) என்பவரது வீட்டில் 5 எலும்புக்கூடுகளை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வீட்டில் ஜெகநாத் ரெட்டி, அவரது மனைவி பிரேமா (80), மகள் திரிவேணி (62), மகன்கள் கிருஷ்ணா (60), நரேந்திரன் (57) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது யாராவது கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எலும்புக்கூடுகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 

Tags :

Share via