மேல்மருவத்தூர் சென்ற பக்தர்களின் பேருந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்து.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா கீழ்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் குழுவினர் சுமார் 54 பேர் தனியார் சுற்றுலா பேருந்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு தரிசனம் செய்வதற்காக சென்றனர்.அவர்கள் சென்ற பேரூந்து திண்டிவனம் வந்தவாசி சாலை வழியாக மேல்மருவத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது செய்யாறு அடுத்த புரிசை கிராமம் அருகே வளைவு ஒன்றில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் 32 பேர் சிறு காயங்களுடன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : மேல்மருவத்தூர் சென்ற பக்தர்களின் பேருந்து சாலையோர புளியமரத்தில் மோதி விபத்து.