சிறுமியை காப்பாற்ற முயற்சித்த நபர் பலி
பெரு நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அறையின் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது கட்டிடத்தின் கீழ நின்றுகொண்டு பொதுமக்கள் அவரை சுடமைதானப்படுத்தி கீழ வரவைக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த அறையின் மேற்பகுதியில் உள்ள அறையின் ஜன்னல் வழியாக 42 வயது மதிக்கத்தக்க நபர் கீழே இறங்கி சிறுமியை காப்பாற்றி விடலாம் என நினைத்து இறங்கும்போது தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் தலையில் அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது
Tags :